EVIDENCE TO PROOVE THE TRUTH ABOUT THE MISSING LINK OF PANDYAN DYNASTY
THE FALLOWING IS THE EXCERPTS FROM THE VENGALARAJAN VILLUPAATTU KATHAI VERY FAMOUS IN NAGERKOIL AREA
இனி, கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தென்தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் பற்றி ஆராய்வது, வெங்கலராசனின் அவலமுடிவு குறித்துப்புரிந்து கொள்ள உதவும். கி.பி. 1546இல் நிகழ்ந்த விட்டலராயரின் படையெடுப்பு, அப்போது Bettibumal (வெட்டும் பெருமாள்), Iniquitibirim (உண்ணிகுட்டி வர்மா என்கிற பூதலவீரராம வர்மா) ஆகியோரின் நிலை ஆகியவை குறித்து ஏசுசபை ஆவணங்களில் கண்ட செய்திகளின் அடிப்படையில் வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக விவாதித்துள்ளனர். Mortem (குமரிக்கு அருகிலுள்ள முட்டம் - கோவைக் குளம்) என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு அதிகாரம் செலுத்திய முக்குவர் குலத்தலைவர் கத்தோலிக்க சமயத்திற்கு மாறிய செய்தியும் ஏசுசபை ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. இவர், பாண்டிய மன்னனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார் என்றும் கன்னியாகுமரி அரசர் என்றே அழைக்கப்பட்டார் என்றும் அறிகிறோம்.4 திருவிதாங்கூர் அரசரான பூதலவீரராமவர்மா, விட்டலராயருக்குப் பணிந்து கப்பம் கட்டித் தமது நிலையைக் காத்துக் கொண்டார். கி.பி. 1546ஆம் ஆண்டைச் சேர்ந்த கோடகநல்லூர்க் கல்வெட்டு5, விட்டலராயர் ஆணைப்படி ராமவர்மா, தாத்தப்பையங்கார் மகன் சிங்கரையன் என்பவர்க்குக் கடமை, வலங்கை முதலிய வரிகளை வசூலித்துக் கொள்ள அதிகாரம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது. விட்டலராயர், வெங்கலராசனைத் தமது காரியத்துக்குக் கர்த்தராக நியமித்துச் சென்ற பின்னர், பூதலவீர ராமவர்மா, விஜய நகர மேலாதிக்கத்தைப் பொருட்படுத்தாமல் முத்துக்குளிதுறை (காயல்பட்டணம், தூத்துக்குடிப் பகுதி)யைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார் எனத் தெரிகிறது. கி.பி. 1558ஆம் ஆண்டில் இந்நிலை நிலவிற்று என அறிஞர் ஆர். சத்தியநாத ஐயர் எழுதியுள்ளார்.6 இது இஸ்லாமிய மரக்காயர்களின் கடற்படை வலிமையின் துணை கொண்டு சாதிக்கப்பட்டிருக்க வேண்டும். "பூதலவீரராம" எனப் பொறிக்கப்பட்ட காசுகள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் கண்டறியப்பட்டுள்ளது.7 இக்காசுகள், ராமவர்மா சுயாட்சியடைந்துவிட்டார் என்பதையும் நெல்லைச் சீமையின் கடற்கரைப் பகுதி அவரது ஆதிக்கத்தில் இருந்துள்ளது என்பதையும் உணர்த்துகின்றது.
சற்றொப்ப இதே காலகட்டத்தில் தன்மப் பெருமாள் குலசேகரதேவன் என்றும் திருநெல்வேலிப்பெருமாள் என்றும் வெட்டும் பெருமாள் என்றும் அழைக்கப்பட்ட கோமாறவர்மன் ஸ்ரீவல்லபன் (சீவலமாறன்) தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். இவருடைராமவர்மாவுக்கு உதவி புரிந்த "வன்னியர்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் குலப் பிரிவினரின் மூப்புக்கூறு ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது எனப் பாளையப்பட்டுகளின் வம்சாவளி மூலம் தெரியவருகிறது.8 பெயரளவுக்காவது தமது அதிகாரத்தைக் காத்துக் கொள்வதற்காகத் தென்காசிப் பாண்டிய அரச வம்சத்தவர், கள்ளர்-மறவர் குலத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களுடைய படைத்துணையை உறுதிப்படுத்திக் கொண்டனர். கோசடிலவர்மன் அழகன் பெருமாள் அதிவீரராமரான ஸ்ரீவல்லபதேவன், கி.பி. 1565ஆம் ஆண்டில் சாம்பவர் வடகரைச் சிவன் கோயிலின் ய ஆட்சிக் காலத்திலேயே தென்காசிப் பாண்டியர்கள், பலவிதமான மனச் சமாதானங்களுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொள்ள நேர்ந்தது. தலைநகரான தென்காசியிலேயே பூதலவீர பண்டாரக் கணக்கு, திருவாழிக் கண்காணி, திருமாலை ஆகியவற்றினை நிர்வகிப்பதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டுக் கிடாரத்தூர் இராக்கதப் பெருமாள் கள்ளப்பிரான் சீவலக் காலிங்கராயனுக்குக் காணியாட்சி வழங்கினார்.9 இதே அரசன், கி.பி.1567இல் உலகு சிந்தாமணி வளநாட்டுக் கிடாரத்தூர் சீகையிலாசமுடையான் மறத்திரு வாணாதராய பெருமாளுக்குக் கிளாங்காட்டூர் ஆலயத் தர்மகர்த்தா கணக்குக் காணியாட்சி வழங்கினார்.10 இவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கும் செயல்பாடே, கி.பி.17 ஆம் நூற்றாண்டில் சிவகிரி, ஊற்றுமலை, நெற்கட்டுஞ் செவல், தாருகாபுரம் போன்ற பாளையப் பட்டுகள் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது. இப்பாளையப்பட்டுகளுள் சில சீவலமாறராசாவால் தமக்குப் பாளையப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுவது இக்காரணத்தாலேயே ஆகும்.11 மட்டுமின்றி, கம்பளத்து நாயக்கர்கள், அனுப்பக் கவுண்டர்கள் போன்ற தெலுங்கு-கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட குலத்தவரும் சீவல மாற ராசாவுக்குத்தாம் படைத்துணை புரிந்ததற்குப் பிரதியுபகாரமாகச் சில அதிகாரங்களை அடைந்ததாகச் செப்பேடுகளில் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.12
தென்காசிப் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை விஜய நகர அரசர் அச்சுதராயர், தமது தாமிரவர்ணிக் கரை திக் விஜயத்தின் போது (கி.பி. 1530) மணம் புரிந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.13 விஜயநகர அரசவம்சத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இத்தகைய மண உறவுகள் மூலம் பாண்டிய அரசின் வாழ்நாள் சிறிது காலம் நீடிக்க முடிந்தது. ஆயினும், 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை நாயக்க அரசர் (கவறை நாயுடு குலப் பிரிவைச் சேர்ந்தவர்) இரகுநாதநாயக்கர், களாவதி என்ற பெயருடைய பாண்டிய குல இளவரசியை மணம் புரிந்தார், எனக் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் செங்கல்வ காளகவி என்பவரால் இயற்றப்பட்ட "ராஜ கோபால விலாஸமு" என்ற தெலுங்கு இலக்கியத்தால் தெரியவருகிறது.14 களாவதி என்ற பெயர், கரிவலம் வந்த நல்லூர் இறைவனின் பெயராகிய "களாலிங்கர்" என்ற பெயருடன் தொடர்புடையதாகும். கரிவலம் வந்த நல்லூரைத் தலைநகராகக் கொண்டு வரதுங்கராம பாண்டியன் ஆட்சி புரிந்தார் என்றும், இவர் அதிவீரராம பாண்டியனின் சகோதரர் என்றும், கொக்கோக நூல் இயற்றியவர் என்றும் கருதப்படுகின்றன. கரிவலம் வந்த நல்லூர்க் களாலிங்கர் மீது "கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி" பாடியவர் இவரே என்று கருதப்படுகிறது. இந்நூல், குட்டித் திருவாசகம் என்றே புகழப்படும்.15 களாவதி, வரதுங்கராமனின் மகளாக இருக்கலாம். இவரே இரகுநாத நாயக்கரின் பட்டத்தரசியாவார். இரகுநாத நாயக்கர்க்கும் களாவதிக்கும் பிறந்த ராமபத்ர நாயக்கர் என்பவர் சோழநாட்டுக் கடற்கரைத் துறைமுக நகரங்களை கி.பி. 1630 வரை நிர்வகித்து வந்ததோடு, கடற்படையின் துணை கொண்டு இலங்கையின் யாழ்ப்பாண ராஜ்யத்திலும் அதிகாரம் செலுத்த முயன்றுவந்தார்.16 இவருக்கு இராமேஸ்வரம் பாண்டி நாட்டுக் கொற்கை போன்ற துறைமுக நகர்களுடன் தொடர்பிருந்ததாகக் ஊகிப்பதற்கு ஆதாரம் உள்ளது.17
பாண்டிய அரச வம்சத்தவர் மிகவும் வலிமையிழந்த நிலையிலிருந்த இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் கடற்படை வலிமை வாய்ந்த போர்ச்சுகீசியர் ஆதிக்கம் செலுத்திவந்தனர். வெங்கலராசனின் தகப்பன் வீர சோழ நாடான் பொற்காசு அடித்து வெளியிட்ட போது வெள்ளைக்காரன் தனது உருவத்தைப் பொறித்து வெளியிடச் சொன்னான் என்றும், வீர சோழநாடான் அதற்கு மறுத்ததால் வெள்ளைக்காரன், வீரசோழநாடானைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் வில்லுப்பாட்டு நூல் குறிப்பிடுவது, இலங்கை அரசியலில் போர்ச்சுகீசியர் ஊடுருவலையும் ஆதிக்கத்தையும் குறிக்கும் சான்றுகளாகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாரசீகரின் தலையீட்டால் நேபாள அரசன் தனது ராஜ்யத்தை விட்டுப் புகலிடம் தேடிவந்து தஞ்சை நாயக்கரின் அரண்மனையில் தங்கியிருந்தான் என 'சாஹித்ய ரத்னாகரம்' என்ற நூலால் தெரியவருகிறது. இந்நூலில் பாரசீகர் எனக் குறிப்பிடப்படுவோர் போர்ச்சுகீசியரே என்றும், நேபாள அரசன் எனப்படுபவன் யாழ்ப்பாண ஆரியச் சக்ரவர்த்தி வம்சத்தவனே என்றும் அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். யாழ்ப்பாண அரசில் மட்டுமின்றி, கண்டி அரசியலிலும் போர்ச்சுகீசியர் தலையீடு அதிகரித்துவந்தது. அரச குடும்பத்தவரிடையே கத்தோலிக்க சமய மதமாற்றம் நிகழத் தொடங்கிற்று. தென்பாண்டி நாட்டைப் பொருத்தவரை கடற்கரைப் பரதவர்கள் ஒட்டு மொத்தமாகக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களாக மாறிவந்தனர். கி.பி. 1540 அளவில் போர்ச்சுகீசியரான பிரான்சிஸ் சேவியர், விஜய ந்கரப் படைகளுக்கு எதிராகப் பரதவர்களின் அணியை வழிநடத்திய படைத்தலைவராகவே இருந்தார் என்றும், பின்னர் திருவிதாங்கோட்டு அரசர் ராமவர்மாவுக்கும் விஜயநகர அரசர்க்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார் என்றும் சில வராலாற்றாய்வாளர்கள் எழுதியுள்ளனர்.18 இது எந்த அளவுக்குச் சரியான செய்தி எனத் தெரியவில்லையாயினும், பூதலவீர ராமவர்மா போர்ச்சுகீசியரின் கடற்படையைத் துணை கொண்டு இயங்கிய முத்துக்குளிதுறைப் பரதவர்கள், விஜய நகர அரசு ஆகிய முத்தரப்பினரிடையிலும் ஒருவித ஒப்பந்தம் நிலவிற்று என்றும், பூர்விக அரச மரபினரான பாண்டியர்களே தமது இருப்பைக் காத்துக்கொள்ளும் பொருட்டுக் கவறை நாயுடு சமூகத்தவரான நாயக்க அரசர்களுக்குப் பெண் கொடுத்து மண உறவு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதென்றும், இத்தகைய சூழலின் காரணமாக வெங்கலராசன் வெற்றிகரமாகச் செயல்படவும் தனது அரசியல் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் இயலாத நிலை உருவாகி விட்டதென்றும் தெளிவாகத் தெரிகின்றன. கி.பி. 1565 அளவில் மதுரை நாயக்க அரசர் குமார கிருஷ்ணப்ப நாயக்கர், கண்டியின் மீது படையெடுத்துச் சென்று கண்டியரசனைக் கொன்று அந்த அரசைக் கைப்பற்றினார் என்றும், தமது மைத்துனர் விஜயபூபால நாயக்கரைக் கண்டியின் ஆளுநராக நியமித்தார் என்றும் அதிலிருந்து கண்டி நாயக்கர் வம்சம் உருவாக்கப்பட்டது என்றும் "சிம்ஹளத்வீபகதா" என்ற நூலால் தெரிய வருகிறது.19 இத்தகைய சூழலில், வலிமையான கடற்படை மற்றும் காலாட்படையின் உதவியோ, அரசியல் உறவுகளோ இன்றித் தனித்து விடப்பட்ட வெங்கலராசன் வீழ்ச்சியின் விளிம்பை நோக்கிச் சென்றது .
இந்த இடத்தில், மதுரை நாயக்கராட்சி உருவான விதம் குறித்த பழங்கதைகளும் ஆராயப்பட வேண்டியவையாகின்றன. சந்திரசேகர பாண்டியனுக்கும் வீரசேகர சோழனுக்கும் ஏற்பட்ட பூசலில் சந்திரசேகர பாண்டியன் ஆட்சியிழந்தான் என்றும், விஜய நகர அரசர் கிருஷ்ண தேவராயரையணுகித் தனது ஆட்சியை மீட்டு வழங்குமாறு சந்திரசேகர பாண்டியன் வேண்டுகோள் விடுத்ததால் கிருஷ்ணதேவராயர் படையுடன் நாகம நாயக்கரையனுப்பிப் பாண்டியனை மீண்டும் அரியணையில் அமர்த்துமாறு ஆணையிட்டார் என்றும் நாகம நாயக்கர் தாமே ஆட்சியைப் பிடித்துக் கொண்டார் என்றும், நாகம நாயக்கர் மகன் விஸ்வநாதன் கிருஷ்ணதேவராயருக்கு விசுவாசத்துடன் நடந்து கொண்டு தந்தையையே போரில் வென்று சிறைப்பிடித்தார் என்றும் அதனால் மனமகிழ்ந்த கிருஷ்ணதேவராயர், விஸ்வநாதநாயக்கரையே மதுரையின் ஆளுநராக நியமித்தார் என்றும் பழங்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் கல்வெட்டு, செப்பேடு போன்ற ஆதாரங்களை ஆராய்ந்தால், இன்றைய சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இலங்கையோடு கடல் வழித் தொடர்பு கொள்வதற்கு வசதியான இடங்களில் தான். நாகமநாயக்கர், சந்திரசேகரபாண்டியன் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.20 திருப்புத்தூரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிங்கம்புணரி உருத்திர கோடீஸ்வரர் ஆலயத்தில் சுபானு வருடத்தை (கி.பி. 1523)ச் சேர்ந்த கல்வெட்டில் "நரஸிங்ஹராயஸிம்ஹாஸனத்து சந்த்ரசேகர பாண்ட்ய" என்ற குறிப்பு காணப்படுகிறது.21 கிருஷ்ண தேவராயரின் ஆதரவுடன் இப்பாண்டிய மன்னன் ஆட்சிபுரிந்து வந்தான் என்பது நரசிங்கராய சிம்ஹாஸநம் என்ற குறிப்பால் தெரிய வருகிறது. கி.பி. 1542இல் அச்சுதராயரையடுத்து ஆட்சிக்கு வந்த விஜயநகர் அரசர் சதாசிவராயர், திருவாடானைப் பாண்டியர்களை ஒடுக்கினார் எனச் சில வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர். அது சரியானதாக இருக்குமானால் சந்திரசேகர பாண்டியனைத் திருவாடானைப் பாண்டியனாகவே கொள்ள வேண்டும். வீரசேகர சோழன், திருச்சிராப்பள்ளியை ஆண்டு வந்தான் என்றும், அவனுக்கும் சந்திரசேகர பாண்டியனுக்கும் பூசல் ஏற்பட்டதென்றும் அதன் விளைவாகவே கொடியம் நாகம நாயக்கர் தமிழக அரசியலில் தலையிட்டார் என்றும் "தம்மம் பட்டி திருமலை முத்து மாதா நாயக்கர் வம்சாவளி" குறிப்பிடுகிறது.22 பழனி சின்னப்ப நாயக்கர் வம்சாவளியோ, ஈழத்துராசா, குறுமன்னியர் உதவியுடன் பாண்டிய தேசத்தைக் கட்டிக் கொண்டமையால் நாகம நாயக்கரும் விருது கட்டாரி சாளுவ நாயக்கரும் ஈழத்தரசனுடன் போரிட்டனர் என்று குறிப்பிடுகிறது.23 இத்தகைய குறிப்பிலுள்ள குழப்பங்களை நீக்கி, ஒத்த கருத்தை உருவாக்கினால் தெலுங்குச் சோழ மரபினனான வீரசேகர சோழன் மகன் வேலம்பளட்டி வெங்கலதேவ மகாராசன், விஜயநகர அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு உறையூரிலிருந்து கொண்டு ஈழநாட்டின் சில பகுதிகளை நிர்வகித்து வந்தான் என்றும், போர்ச்சுகீசியருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஈழத்திலிருந்து விரட்டப்பட்டுத் தமிழகத்திற்கு வந்தான் என்றும் உறையூர் (திருச்சிராப்பள்ளி) தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் கவறை நாயுடு குலத்தவரின் நாயக்கத்தனம் உருவாகிவிட்ட நிலையில் அங்கு குடியேற இயலாமல் இலங்கை வன்னியர்களின் துணையுடன் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் காலூன்ற முயன்று சந்திரசேகர பாண்டியனுடன் போரிட்டான் என்றும், விட்டலராயரின் ஆதரவுடன் நெல்லைச் சீமையில் அதிகாரம் செலுத்த முயன்றான் என்றும், இவற்றுள் எந்த முயற்சியிலும் முழு வெற்றி கிட்டாமலும் குறுகிய காலம் சுயாட்சியமைத்த பிறகு கூட நட்பு அரசர்களின் துணையின்றிப் போனதாலும் தென்குமரிக்கருகே மணக்குடி காயல் பகுதிக்குச் சென்று வாழ்ந்தான் என்றும் யதார்த்தமான அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள இயலாமல் பழைய யுகத்தின் பிரதிநிதியாக வாழ்ந்து மறைந்தான் என்றும் முடிவு செய்யலா
Jesuit -saverior notes
1541 - ஆம் ஆண்டு திருவாங்கூர் மாநிலத்தை 'உன்னிக் கேரளத் திருவடி' என்ற ராமவர்மா ஆண்டு வந்தார். குமரி முதல் கொல்லம் வரையிலும், உள்நாட்டில் தரணியெங்கும் பரணி பாடும் தாமிரவருணி ஓடும் தெற்கு திருநெல்வேலி வரையிலும் பரந்து கிடந்தது அவரது ஆட்சி. 1544 - முதல் திருவிதாங்கூர் பகுதியை மட்டும் ராமவர்மாவின் தம்பி மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கோட்டில் அரண்மனை அமைத்து ஆண்டு வந்தார். கயத்தாற்றைச் சார்ந்த 'வெட்டும் பெருமாள்' என்ற பாண்டிய மன்னன் 'புல்லர்' என்ற தனது அடியாட்களை வைத்து ராமவர்மாவின் நிலப்பரப்பிற்குள் நுழைந்து சில இடங்களை கையகப்படுத்திக் கொண்டான்.
தனது படைகளால் மட்டுமே புல்லர்களை வெல்ல இயலாது என்றெண்ணிய மன்னர் ராமவர்மா, அந்நாளில் கடல் ஆதிக்கத்தால் இந்தியாவில் செல்வாக்குப் பெற்றிருந்த போர்த்துக்கீசியரின் உதவியைப் பெற எண்ணி போர்த்துக்கீசியரான சவேரியாரை அணுகினார். தனது பணிக்கு இது சாதகமாகவே அமையும் என்றெண்ணிய சவேரியாரும் அந்நாளைய போர்த்துக்கீசிய ஆளுநர் 'அல்போன்ஸ்' என்பாரிடம் தூது சென்று போர்த்துக்கீசிய படைகளின் உதவியோடு ராமவர்மாவின் படைகள், அநியாயமாக ஆக்கிரமிப்பு காட்டிய புல்லர் படையை புறமுதுகிட்டு ஓடச் செய்தது. மகிழ்ந்து அக்களிப்பு கொண்ட ராமவர்மா அக்கணமே ஆலயங்கள் அமைப்பதற்கும், மக்கள் மறையை தழுவுவதற்கும் அனுமதி அளித்ததோடு இரண்டாயிரம் பணமும் தந்தார். paaraikkudi plates
October 6, 2006
பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாறைக்குட்டம் என்ற ஊரில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் திரு. து. கிருஷ்ணசாமி அவர்களிடம் இச்செப்பேடு உள்ளது. இச்செப்பேட்டின் நீளம் 22 செ.மீ., அகலம் 10 செ.மீ. செப்பேட்டின் இருபுறங்களிலும் தமிழில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடு முன்புறத்தில் உச்சியில் தோரணம் போன்று செதுக்கப்பட்டுள்ளது.
1. ஸ்ரீ கணபதியே நமசிவாய உ சாலிவா கன சகாற்றம்1 ???? வரு2 மேல் செல்லா நின்
3. ற கொல்லம் ????? வரு3 குறோதன வரு தைய். மீ ?? உ4 ஆயித்தவாரமும்5 புணர்பூச நட்செத்தி
5. ரமுந் துருவனாம யோகமுஞ் சிங்கலக்கினமுங் கூ டின சுபதினத்தில் சீவல(மார) வெட்டும் பெருமாள்ரா
7. சா அவர்கள் ஒள்ளிக் கவுண்டனுக்கு செக்காலை நாட்டாண்மை எல்கை நிலமைக்குக் கிரையசா
தனப் பட்டயமெளுதிக் குடுத்தபடி நாட்டாண்மை எல்கை நிலமைக்குக்கிறைய சாதனமாவது செக்காலை நான்கு எல்லைக்குள்பட்ட கிறாமம் காடா ம் பிரமாய் யிருந்ததை தம்பி குலசேகர ராசா முன் னிலைக்குத் தான் குடிபத்திவித்து நமக்குத்தான் மனு 14. டனானதாலும் தன்னுடைய குமாரர் கோட்டைக் கெம்பக் கவண்டன் தீத்தாக் கவண்டனும் நூ 16. று சனமும் தம்பி குலசேகரராசா இடத்தில்க்காத்திருப்பதாலும் தன் பேரிலபிமானித்து செக் காலைப் பெருமாள் கோவில்க் கம்பத்துக்கு நான்கு எல்கைக்குள்பட்ட கிறாமத்துக்கு மாலுங் 20. கட்டிக் குடுத்துக் கிறைய சாதனப் பட்டய மெளுதி க் குடுக்கச் சொல்லி மாப்பிள்ளை சிவசங்கரரசா அவர்களையனுப்பி யிருப்பதாலவர் முன்னி லைக்கு நான்கு எல்லைக்குள்பட்ட கிறாம த்துக்கும் கம்பத்துக்கும் கிறையமாயிரம் பொன்னய்ப் பட்டயமெளுதிக்குடுத்து செக்காலை நான்கு எல்லைக்குமா லாவது கிளக்கு எல்கை உமுரிக்காடு பேரூறணி முக் கூ டல் கள்ளன் பரும்பில்த் தென்தலை நேர்கண்ட மேற்கு உப்புப் பாதை நேராக முப்பதடி குறுக்கம் தன்னடியிலக்கடியான6 குறுக்கம் ??? -ம்7 மேற்கு நின்றும்தெற்கெல்கை கரிக்காளக் கவண்டன் குடியிரு ப்பு நாகலாபுரம் வடதலைக்கும் காரிசேரி எல்கைக்கும் முப்பதடிக் குறுக்கம் ?ளுக்குத்8 தெற்கு நின்று மேற்கு எல்கை மேலவூர் ராசாக்கள் பட்டி அஞ்சக்காறன்9அங்கணஞ் சேருவைகாறன் குடியிருப்பு வடமேல்தலைக்குஞ் சிங்கத்தா குறிச்சி பூவாணி முக்கூடல் எல்கைக்கு முப்பதடிக் கொண்ட குறுக்கம் ??? றால்10மேற்கு நின்றும் வடக்கெல்கை கல்வெட்டுக் குளிக்குமணியாட்சை சேகர முடவன் ராமன் பட்டி உமுரிக்காடு முக்கூடல் எல்கைக்கும் முப்பதடிக் குறுக்கம் ??? ம்11 வடக்கு நின்றும் இப்படி நான்கு எல்கைக்கும் சத்திரம் நோட்ட மாலுங்கட்டி செக்காலை நான்கு எல்கைக் குள்ப் பட்ட கிறா(ம)ம் ஏழுக்கும் நாட்டாண்மை உண்பளம்12 கயறு ?ம் பெரியகுளம் நஞ்சையில் கரையடி வயல் சேகர ம் ? ?ம்13 எல்கை உம்பளம் நான்கு எல்கைக்கு(ள்)கயறு ?ம்14 நஞ்சையில் வாளையடி கிணத்து கீள்வய ல் ? சேகரம் கவு15 மானிபம் விட்டுக் குடுத்து இந்த 47. ப் படிக்கு நான்கு எல்கையு மனு நீதி முறமையாய் நட ந்து கொண்டு உள்ள சுவாத்தியமுங்கையாண்டு வருவாநாகவு மாகையால் கீள் நோக்கிய கிணறும் மேல் §நாக்கிய மரமும் சந்திராதித்தர் உழ்ழ16 வரைக்கும் நான்கு எல்கைக் குள்ப்பட்ட நிதி நிட் செயம்17 கிறையசாதன மாகையால் மகன் மகனாய் கையாண்டு வருவானாகவும் யாதாமொருதர் செக்காலைக்கு வந்த அரம னையார் தாங்கள் எழுதிக்குடுத்ததாகத் தூண்டின விரல்ச் சொக்கம் பெறுகிறதாகவும்18 கையாண்டுவரப் பண்ணித் தருவாராகவும் இதுகளில் யாதாமொருதர் கிறைய சாதனப் பட்டையத்து(க்)கும் சே த்திர சுவாத்தியத்துக்கும் யிந்த அங்கிஷத்துக தீங்கு செயுதால் ராச அபிமான முந் தப்பிக்காராம்பசுவைக் கொன்ற தோசத்திலேயும் பிராமணரையும் சிசு வதையும் செய்தவன் போனதோசத்திலெ போவாராகவும் இந்தப் படிக்குசெக்காலைக்கு எல்கைக்குள்பட்ட கிறாமத்துக்கும் நாட்டாண்மை எல்கை நிலமைக்கும்கிறைய சாதனப் பட்டயமெளுதிக் குடுத்தோம் சீவலமாற வெட்டும் பெருமாள்ராசா அவர்களோம் ஒள்ளிக் கவண்டனுக்கு இந்தக் கிறைய சாதனபட்டயமெளுதினேன் செக்காலை நாட்டுக் கணக்கு சிவஞானம்கை எளுத்து இந்தப் பொன்னாயிரத்துக்கும் சீவல மாறவெட்டும் பெருமாள் ராசா உ யிப்படிக்கு அறிவோம் நிதி நிற்சேயம் கிறைய சாதனமாயிரம் பொன்னுக்குச்சிவசங்கர ராசா மீனாட்சி துணை உ கவண்டர் சொல்ப்படிக்குக் கோட்டைக் கெம்பக் கவண்டன் தீத்தாக்கவண்டன் சின்னதம்பிவடையக் கவண்டன் பூசாரி கொ ண்டுக் கவண்டன் யிந்த வளிபாடாய் மானிபம் என்றைக்கும் நாலு பங்காய்ப் பகுந்து கொள்ளவும் செய்து நிலையம் தொட்டராயப் பெருமாள் பூசாரி நம்முடையகுமாரன் செட்டைக்19 கெம்பக் கவண்டனாகையால் ஷெகோடாங்கி மல்லேசுரன் முன்னிலைக்கும் தொட்டராயப் பெருமாள் முன்னிலைக்கு பொதி போட்டு சகலதெய்வமுஞ் சேகரித்துக் குல தம்பிரானுடனே ஒரு கலத்தில் உண்பதாலும் பூசாரி கொண்டுக் கவன்டன் சகல தேவதைக்குங்கை கருமஞ் செய்வதா லும் எட்டுநாளை நோன்புயிருந்து தேவதை சம்மதிப்படிக்கு நாலு கும்பிடு கண்டதாலு மல்லேசுபரன் வாக்குப்படிக்குப் பெருமாள் பூசாரி கோட்டைக் கெம் பக் கவண்டனும் குலதெய்வம் பூசாரி கொண்டுக் கவண்டனையும் யிருபேரையும் சரிகும்பிடு கண்டு மற்றக்குடிக்கு முன்னவன் ஒள்ளிக் கவண்டன்தீத்தாக் கவண்டன் சின்னத்தம்பிக் கவண்டன்வெள்ளையக் கவண்டன் சவடி தாளப்பக் கவண்டன்மற்றக்குடியர் சகலருங் கும்பிடுங் கண்டு கருஞ்சாதி சவடி சிக்கல் முத்தன் அவன் சம்மந்தம் சுருதிக்கொண்டன் வாணியார் தீத்தன் முதலாகிய சனமுங்கும்பிடுங்கண்டு கோயில்த் தொளிலாளி தலத்தில் (த்தில்) க்காத்திருக்கிறவனுக்கு களக் குறுணியுங்கட்டுங்குடுக்கவும் தலத்தில் யிராமலிருக்கிற தொளிலாளிக்குச்சனம் -க -க்கு பத்துப் பணம் கோயி(ல்) நாக சுரங்கைய்யில்ப் பிடி ததவனுக்கு வருடாந்திரம் கருஞ்சாதியில் யினவளி தெடுத்து வாங்கவும் விழுந்த காணிக்கையும் கருஞ்சாதிப்பணமும் முன்னவனான பூசாரி கொண்டு கவண்டன் வள வில் வந்த ருயா சகலரும்20 சாப்பாடும் கோயில் பொதுச் சிலவும் நீக்கி மிஞ்சின ஆதாயம் தெய்வத்துக்குக்கை கருமஞ் செய்து வருகிற பூசாரி கொண்டுக் க வண்டனுக்கு யிந்த வந்தினைவளிபாடாய் சிறப்புங்குடுக்கவும் பூசாரி கற்மாதிக்கு உடையவன் சின்னத் தம்பிக் கவண்டன் வருடம் ஒன்றுக்கு வரி சை பட்டையத்துக்கு ஒரு பணம் இந்தப் பட்டய த்துக்கு தீங்கு செய்யவென்று நினைத்தவன் போன தோசத்திலெ போகாமல்ப் பெரிய தம்பி கோட்டைக் கெம்பக் கவண்டன் தங்காரஞ்21 செய்த பே ற்க்குக் குடுத்து வரவும் தொட்டராயப் பெருமாள்கிறுபையுண்டு உ குமரன் துணை.
இச்செப்பேட்டில் கி.பி. 1123ஆம் ஆண்டுக்குச் சமமான சக வருடம் 1045 மற்றும் கொல்லம் 299 ஆகியவை குறிப்பிடப்படுகின்றன சீவலமாறவெட்டும் பெருமாள் ராசா, தமது தம்பியாகிய சீவலமாறக் குலசேகரராசா மூலமாகவும் மாப்பிள்ளை சிவசங்கர ராசா மூலமாகவும், செக்காலைக்குடி நாட்டாண்மை, நிலைமை முதலிய அதிகாரங்களை ஒள்ளிக் கவுண்டனுக்கு வழங்குகிறார். (செக்காலைக்குடி என்ற ஊர் இச்செப்பேட்டுக்குரியவர் வசிக்கின்ற பாறைக்குட்டம் வட்டாரத்தில்தான் உள்ளது. இவ்வூர், சீவலமாறக் குலசேகரராசா முன்னிலையில்தான் முதல் முதலில் குடியேற்றப்பட்டது என்ற விவரம் இச்செப்பேட்டின் முதல் பக்கம் வரி 10-13 ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.)
கி.பி. 1140ஆம் ஆண்டுக்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்படும் புதுப்பட்டிச் செப்பேடு செக்காலைக்குடி உள்காவல் காணியாட்சியைச் சீவலமாற பராக்ரம பாண்டியன் ஆணைப்படி, மேற்குறிப்பிட்ட ஒள்ளிக்கவுண்டர், மயிலம் பராக்ரம பாண்டிய நாயக்கருக்கு வழங்கிய செய்தியைக் கூறுகிறது. அதாவது, கயத்தாற்றுப் பாண்டிய மன்னர்களிடமிருந்து செக்காலைக்குடி ஊரின் நாட்டாண்மை முதலிய அதிகாரங்களைப் பெற்ற, கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அனுப்பக்கவுண்டர் குலத்தவராகிய ஒள்ளிக்கவுண்டன், செக்காலைக்குடி ஊரின் உள்காவல் காணியாட்சியை (தமது பிரதிநிதியாக இருந்து ஊரின் காவல்பணி புரியும் அதிகாரத்தை)க் கயத்தாற்றுப் பாண்டிய மன்னன் ஆணைப்படியே, கம்பளத்து நாயக்கர் குலத்தைச் சேர்ந்த மயிலம் பராக்கிரம பாண்டிய நாயக்கருக்கு வழங்கிய செய்தியைக் கூறுகிறது.
கி.பி. 1166க்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்படும் சமூக ரெங்கபுரம் செப்பேடு (புதுப்பட்டிச் செப்பேடு பற்றிய எனது கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள செப்பேடு), செக்காலைக்குடி கிராமத்தின் அருகிலுள்ள பேரூரணி (பேரூரணி என்ற பெயர் பெரிய ஊருணி என்ற அடிப்படையில் தோன்றியதாகலாம். இந்த வட்டாரத்தில் மக்கள் நீரருந்தப் பயன்படுத்தும் ஊருணிக் குளங்கள் உள்ளன.) கிராமம் குறித்த முழுமையான அதிகாரத்தை ஒள்ளிக்கவுண்டன் மகன் கோட்டைக் கெம்பக் கவுண்டனுக்குச் சீவலமாற குலசேகரராசா வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது.
மேற்குறித்த மூன்று பட்டையங்களுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை ஆகும். இவற்றுள் சமூக ரெங்கபுரம் செப்பேடே அளவில் பெரியது. அச்செப்பேட்டை வைத்திருப்போர் பேரூரணி கோட்டைக் கெம்பக் கவுண்டன் வம்சத்தவராவர். அவர்கள் பேரூரணியிலிருந்து இன்றைக்குச் சற்றொப்ப முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1975 அளவில்) சமூக ரெங்கபுரத்திற்குக் குடிபெயர்ந்தனர். சமூக ரெங்கபுரத்தில் அக்குடும்பத்தவர் இருப்பதால் சமூக ரெங்கபுரம் செப்பேடு என்று அச்செப்பேட்டைக் குறிப்பிடுகிறோமே தவிர சமூக ரெங்கபுரத்திற்கும் அச் செப்பேட்டிற்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. செப்பேட்டை வைத்திருப்போர் தற்போதும் கோட்டைப் பாண்டியக் கவுண்டன் குடும்பம் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர். அக்குடும்பப் பெயரில் இடம்பெற்றுள்ள கோட்டை பேரூரணிக் கோட்டை ஆகும். பேரூரணி கிராமம் தொடர்பாகக் கொம்மட்டிக் கவுண்டனுக்கும் முடித்தானேந்தல் என்ற ஊரைச் சேர்ந்த செழுகை வேளாளர்களுக்கும் இடையே கி.பி. 1645இல் வழக்கு ஏற்பட்டுள்ளது. (இச்செய்தி புதுப்பட்டிச் செப்பேடு பற்றிய எனது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.) செழுகை வேளாளர் அல்லது நற்குடி வேளாளர் எனப்படுவோர் ஸ்ரீவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமாரின் தாயாதியர் ஆவர். பேரூரணி, செக்காலைக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகில் அல்லிக்குளம் என்ற ஓர் ஊர் உள்ளது. அவ்வூரில் கி.பி. 14ஆம் நூற்றாண்டிலேயே நற்குடி வேளாளர் குடியேறிவிட்டனர் எனத் தெரிகிறது. அவர்கள் மறவர் சீமையான ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியிலுள்ள செழுவனூர் என்ற ஊரிலிருந்து பாண்டிய மன்னர்களின் முழுமையான அதிகாரத்திலிருந்த நெல்லைச் சீமையில் - இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் - உள்ள அல்லிக்குளம் பகுதிக்கு வந்து குடியேறினர். எனவே, அவர்கள் தங்களைச் செழுகை வேளாளர் எனக் குறிப்பிட்டுக்கொண்டனர்.22 கி.பி. 1450ஆம் ஆண்டளவில், அதாவது அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தென்காசியைத் தலைநகராகக் கொண்டும், அவனது இளவலான வீரபாண்டியன் மணப்படைவீட்டைத் தலைநகராகக் கொண்டும் ஆட்சி புரிந்து வந்த காலகட்டத்தில் அல்லிக்குளம் ஊரைவிட்டு இவர்களுள் ஒரு பிரிவினர் ஸ்ரீவைகுண்டம் சென்று குடியேறிக் கோட்டைப் பிள்ளைமார் எனப் பெயர் பெற்றனர். அல்லிக்குளத்திலேயே எஞ்சி நின்ற மறுபிரிவினர் பேரூரணி, முடித்தானேந்தல், செவ்விளை (சிவகளை), கொற்கை முதலிய ஊர்களிலும் பரவலாகக் குடியேறினர்.
சமூக ரெங்கபுரம் செப்பேட்டில் கயத்தாற்றுப் பாளையத்தை மதுரைப் பாண்டியராசாவிடமிருந்து காத்ததாகவும், மதுரைப் பாண்டிய ராசாவின் மருமகன் இருங்கோளப் பாண்டியனைக் கொன்றதாகவும் கோட்டைக் கெம்பக்கவுண்டன் குறிப்பிட்டுக் கொள்கிறார். இருங்கோளப் பாண்டியன் என்று அச்செப்பேட்டில் குறிப்பிடப்படுபவர் செழுகை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும்.23 மதுரைப் பாண்டிய ராசாவின் மருமகன் இருங்கோளப் பாண்டியனுக்கும் கயத்தாற்று பாண்டிய ராசாவுக்கும் பூசல் ஏற்பட்ட காலகட்டம் கி.பி. 1540-1550 ஆண்டளவிலாக இருக்க வேண்டும். தென்காசிப் பாண்டியர், கயத்தாற்றுப் பாண்டியர் போன்ற பெயர்களில் நெல்லைச் சீமையை ஆண்ட பாண்டிய வம்சத்தவருள் விஜயநகர அரசர்கள் அச்சுதராயர், விட்டலராயர் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. அக்குழப்பத்தைப் பயன்படுத்திச் செழுகை வேளாளர்கள் மதுரை நாயக்க அரசின் புதிய அதிகார மையமாகவும் படைப் பிரிவாகவும் செயல்பட்டுத் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றிருக்க வேண்டுமென்று முடிவுசெய்யலாம். அதற்குச் சமகாலத்தில் சீவலமாற பராக்கிரம பாண்டியன் எனப்பட்ட திருநெல்வேலிப் பெருமாளுக்கு உதவி செய்கின்ற நோக்கில் அனுப்பக் கவுண்டர்கள் நெல்லைச் சீமையில் குடியேறி இருக்கலாம். கி.பி. 1597 (ஹேவிளம்பி) ஆண்டளவில் தென்காசிப் பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் மற்றும் மதுரை அரசர் வீரப்ப நாயக்கர் ஆதரவுடன் சிறுபாலை அச்சராமக் கவுண்டன் என்ற அனுப்பக் கவுண்டர் குல வீரர் மதுரை, விருதுநகர், சிவகாசிப் பகுதிகளில் காணியாட்சி பெற்றாரென்றும், ஆனால் அக்காணியாட்சி உரிமையைச் சிவகாசிப் பகுதியிலிருந்த அனுப்பக் கவுண்டர் குலத் தலைவர் புல்லக்கவுண்டர் ஏற்கவில்லை என்றும், அதனால் சிறுபாலை அச்சராமக் கவுண்டரின் அதிகார வரம்பு சுருங்கிப் போயிற்றென்றும், திருமலை நாயக்கரின் பிரதானிகள் வைத்தியநாத ஐயர், ராமப்ப ஐயர் ஆகியோரின் தலையீட்டால் சற்றொப்பக் கி.பி. 1640-45 அளவில் மதுரைக்கு அருகிலுள்ள சிறுபாலைப்பாளையம் அச்சராமக் கவுண்டர் வம்சத்தவருக்கு வழங்கப்பட்டு ஒருவிதமான சமரசம் ஏற்பட்டது என்றும் வெம்பக்கோட்டைச் செப்பேடு24, சிறுவாலைச் செப்பேடு25 ஆகியவற்றால் தெரியவருகின்றன. அனுப்பக் கவுண்டர்களுடைய குடியேற்றத்தைக் குறிப்பிடும் மற்றொரு செப்பேடு வெள்ளியங்குன்றம் செப்பேடு26 ஆகும். அச்செப்பேடு திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாயினும் மதுரை நாயக்கத்தனத்தை நிறுவிய விசுவநாத நாயக்கரால் வெள்ளியங்குன்றம் பாளையப்பட்டு அனுப்பக் கவுண்டர்களுக்கு வழங்கப்பட்டது என்ற செய்தியைக் குறிப்பிடுகிறது.
கி.பி. 1547ஆம் ஆண்டைச் சேர்ந்த நடுகற்கள் பல இளவேலங்கால் என்ற ஊரில் கண்டறியப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க நடுகல் ஒன்று மேலைச்செக்காலைக்குடியில் என்னால் கண்டறியப்பட்டுள்ளது. அந்நடுகல் சீவலமாற வெட்டும்பெருமாளின் அணியில் போரிட்டு வீழ்ந்த அனுப்பக் கவுண்டருக்கு உரியதாகவே இருக்கவேண்டும். இப்போர்களில் பாண்டிய மன்னனை எதிர்த்து நெல்லைச் சீமையை ஆக்கிரமிக்க முயன்ற படை வடுகப்படை என்றும் வெங்கலராசன் என்ற அரசன் அவ்வடுகப்படையை வழிநடத்தி வந்தான் என்றும் இளவேலங்கால் நடுகற்களில் குறிப்பிடப்படுகின்றன. இக்கால கட்டத்திற்குப் பின்னர் - குறிப்பாக 17ஆம் நூற்றாண்டில் - வடுகப்படை வீரர்களான கம்பளத்து நாயக்கர்கள் அனுப்பக் கவுண்டர்களுடன் சமரசம் செய்து கொண்டனர் என ஊகிப்பதற்கு ஆதாரம் உள்ளது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்களான, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தோகலவார் பிரிவைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்கள் எண்ணிக்கையில் அதிகமான அளவில் இருந்ததாலும், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அனுப்பக் கவுண்டர்கள் எண்ணிக்கையில் குறைவான அளவில் இருந்ததாலும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கவரை நாயுடு சமூகத்தவர்கள் மதுரை நாயக்க அரசர்களாக ஆட்சி பீடத்தில் அமர்ந்து விட்டதாலும் இத்தகைய சமரசம் எளிதில் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கம்பளத்து நாயக்கர்கள் கவரை நாயுடு சமூகத்தவர் மட்டுமின்றி, கம்மவார், ரெட்டியார் போன்ற தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் சமூகத்தவர் மிகுந்த அளவில் நெல்லைச் சீமையில் - குறிப்பாக இச்செப்பேடுகள் வழக்கிலிருந்த பகுதிகளில் குடியேற்றப்பட்டதாலும் இத்தகைய சமரசம் எளிதில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
சமூக ரெங்கபுரம் செப்பேட்டில் கி.பி. 1166ஆம் ஆண்டுக்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்பட்டாலும், எழுத்தமைதி, சொல் வழக்குகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அச்செப்பேடு 17ஆம் நூற்றாண்டில், குறிப்பாகத் திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட செப்பேடாகவே தெரிகிறது. திருமலை நாயக்கரின் பிரதானியான வடமலையப்ப பிள்ளை காரைக்காட்டு வேளாளர் வம்சத்தைச் சேர்ந்தவராவார். அவ்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பேரூரணியில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய தடயங்களையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் வடமலையப்ப பிள்ளையின் ஆதரவுடன் செழுகை வேளாளர்கள் இப்பகுதியின் மீது தாங்கள் கொண்டிருந்த நீண்ட நாளைய (சற்றேறக்குறைய 3 நூற்றாண்டுகள்) உரிமையைக் காத்துக் கொண்டனர் என நாம் முடிவு செய்யலாம்.
கயத்தாற்றுப் பாளையத்தின் அரசனான சீவலமாறக் குலசேகர ராசாவை எதிர்த்து மதுரைப் பாண்டிய அரசனின் மருமகன் இருங்கோளப் பாண்டியன் கயத்தாற்றை முற்றுகையிட்டுப் போர் தொடுத்ததாகவும் அப்போர் 3 ஆண்டுகள் நடைபெற்றது என்றும் சமூக ரெங்கபுரம் செப்பேடு குறிப்பிடுகிறது. அப்போரில் சீவலமாறக் குலசேகர ராசாவுக்குத் துணை நின்று கயத்தாற்றுப் பாளையத்தைக் காத்த அனுப்பக் கவுண்டன் குலத் தலைவர், 17 ஆண்டுகள் சீவலமாறக் குலசேகர ராசாவிடம் காத்துக் கிடந்து பேரூரணியின் நாட்டாண்மை உரிமையைப் பெற்றதாகவும் அச்செப்பேடு குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுக் கணக்கீடு பற்றிய குறிப்பு சரியானதாயின் புதுப்பட்டிச் செப்பேடு வழங்கப்பட்ட பின்னர் 20 ஆண்டுகள் கழிந்த பின்னரே பேரூரணியின் நாட்டாண்மை உரிமையை அனுப்பக் கவுண்டர் குலத்தவர்கள் பெற்றதாகக் கருதிட இயலும். ஆனால், புதுப்பட்டிச் செப்பேட்டில் வரி 14-16இல் "அய்யா பேரூரணி கோட்டைக் கெம்பக் கவுண்டன்" எனக் குறிப்பிட்டுள்ளது பொருத்தமாக இல்லை. புதுப்பட்டிச் செப்பேடு பற்றிய எனது கட்டுரையில் அடிக்குறிப்பு 6இல் இம்முரண்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இம்முரண்பாட்டிற்கு என்ன காரணம் இருந்திட இயலும் என ஆராய்ந்தால் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.
திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் (17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்) அவருடைய பிரதானி வடமலையப்ப பிள்ளையின் ஆதரவுடன் செழுகை வேளாளர்கள் பேரூரணி வட்டாரத்தில் தம்முடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டபோது கயத்தாற்றுப் பாண்டியர்களின் ஆதரவுடன் 16ஆம் நூற்றாண்டிலேயே அப்பகுதியில் குடியேறிவிட்ட அனுப்பக் கவுண்டர் குலத்தவர்கள் தங்களுடைய உரிமை குறித்த நம்பகத்தன்மையை நிலைநாட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். அம்முயற்சியின் ஓர் அங்கமாகவே செக்காலைக்குடி ஒள்ளிக்கவுண்டன் மகன் கோட்டைக் கெம்பக்கவுண்டனுக்குப் பேரூரணி வணிதசேகர கிராமத்தின் நாட்டாண்மை முதலிய அதிகாரங்களை 12ஆம் நூற்றாண்டிலேயே கயத்தாற்றுப் பாண்டிய மன்னர்கள் வழங்கியிருப்பதாக ஒரு செப்பேட்டைப் போலியாகத் தயாரித்திருக்க வேண்டும். அச்செப்பேடே தற்போது சமூக ரெங்கபுரம் கோட்டைப் பாண்டியன் என்பவரிடம் உள்ள செப்பேடாகும். செக்காலைக்குடி ஒள்ளிக் கவுண்டன் என்று அச்செப்பேட்டில் குறிப்பிடப்படுபவர் 16ஆம் நூற்றாண்டில் வெட்டும் பெருமாள் சார்பாக வெங்கலாராசனின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டு இறந்து மேலைச் செக்காலைக்குடியில் நடுகல்லாக நிற்கும் வீரனாக இருக்கலாம். திருமலை நாயக்கர் காலத்தில் செழுகை வேளாளருடன் நடந்த வழக்கில் பேரூரணி கோட்டைக் கெம்பக் கவுண்டன் வம்சத்தைச் சேர்ந்த அனுப்பக் கவுண்டர்களுக்கு இருந்த பூர்விக உரிமைகள் சிலவும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
இந்நிகழ்வுகள் நடந்து முடிந்து ஓரிரு நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக நடவடிக்கைகளின் விளைவாகச் செக்காலைக்குடி ஒள்ளிக் கவுண்டனின் நேர் வாரிசுகளுக்குத் தங்களுடைய பூர்விக அதிகாரம் குறித்த ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பித்துத் தங்கள் உரிமையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். அதேபோன்று அனுப்பக் கவுண்டர்களின் ஆதரவுடன் செக்காலைக்குடி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கம்பளத்து நாயக்கர் குலத்தவருக்கும் தமது பூர்விக உரிமை குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பித்து தமது நம்பகத்தன்மையை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய நிர்ப்பந்தங்களின் விளைவாகவே இக்கட்டுரையில் நாம் விவாதிக்கின்ற பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு, முன்பு விவாதித்த புதுப்பட்டி கம்பளத்து நாயக்கர் செப்பேடு ஆகியவை பழமைச் சாயல் தோன்றும் வண்ணம் புதியனவாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, இச்செப்பேடுகளை போலியானவை எனக் கருதிப் புறக்கணிப்பது தவறாகும். அதே வேளையில், இவற்றை ஆழமான சமுக வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் கூடிய பரிசீலனைக்கு உட்படுத்தப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
12. கயறு 4 எனக் குறிப்பிடப்படுவது நில அளவாகும். கஜம் --> கயம் என்ற சொல் வேற்றுமை உருபுடன் சேரும்போது அத்துச் சாரியை பெற்றுக் கயத்து என வழங்கும். அது கயற்று எனத் 'திருத்தப்பட்டு' தவறான புரிதலின் அடிப்படையில் கயறு என வழங்கத் தொடங்கியிருக்கலாம்.
18. "தூண்டின விரல் சொக்கம் பெறுகிறதாகவும்" என்பது, கோயில் விளக்கினை அணையாமலிருக்கத் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலியாகப் பிறந்தது என்ற கதை போன்ற ஒரு குறிப்பாகலாம். சொக்கம் என்பது சொர்க்கம் என்பதன் திரிபாகவோ சொக்கத் தங்கம் என்பதன் மரூவாகவோ இருக்கலாம். சொக்கம் என்பது சொக்கத் தங்கம் என்று பொருள் கொண்டால் தூண்டின விரல் பொன்னாகும் எனப் பொருள்படும்.
19. கோட்டை என்பது தவறாக எழுதப்பட்டிருக்கலாம் அல்லது 'ஜேஷ்ட' (மூத்த) என்ற சொல்லின் திரிபான 'கேட்டை' ஆகலாம்.22. செழுகை வேளாளரின் குடிப் பெயர்வு குறித்து, 'Boundary Walls - Caste and Women in a Tamil Community' என்ற நூலில் முனைவர் கமலா கணேஷ் அவர்கள் ஆராய்ந்துள்ளார். (பதிப்பு: Hindustan Publishing Corporation, Delhi, 1993)
23. செழுகை வேளாளர் சமூகத்தின் தலைவர் 'பட்டத்து இருங்கோள் பிள்ளை' என அழைக்கப்பட்டதாகவும், அவருடைய தலைமை இடமான முடித்தானேந்தல் என்பது 'முடிவைத்தான் ஏந்தல்' என்ற பெயரின் மரூஉ மொழி என்றும் தெரியவருகின்றன. இவர்கள் பாண்டிய அரசனுக்கு முடிசூட்டும் அதிகாரம் பெற்றிருந்ததாக உரிமை கொண்டாடுகின்றனர். அடிக்குறிப்பு 22இல் குறிப்பிடப்படும் 'Boundary Walls - Caste and Women in a Tamil Community' என்ற நூலில் இந்த அதிகாரம் குறித்த பல செய்திகள் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் இவர்களுக்குக் கிட்டியிருக்கலாம். கி.பி. 1268ஆம் ஆண்டில் முடிசூடிய மதுரைப் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் தனது மெய்க்கீர்த்தியில் "பழுதறு சிறப்பின் செழுவையர் காவலன் வீரசிங்காதனத்து ஓராங்கிருந்தே ஆரும் வேம்பும் அணியிதழ் புடையாத் தாரும் சூழ்ந்த தடமணி மகுடம் பன்னூறூழி தொன்னிலம் புரந்து வாழ்கெனச் சூட்ட மகிழ்ந்துடன் சூடி" என்று குறிப்பிட்டுக் கொள்கிறான். இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்படும் 'செழுவையர் காவலன்' என்பது இருங்கோளப் பிள்ளை வம்சத்து மூதாதையாகவே இருக்க வேண்டும். செழுகை வேளாளர்கள் பெண்வழி வாரிசுரிமை உடையவர்களாவர். சமூக ரெங்கபுரம் செப்பேட்டில் மதுரைப் பாண்டிய ராசாவின் மருமகன் இருங்கோளப் பாண்டியன் எனக் குறிப்பிடப்படுவது இந்தத் தாய்வழி அதிகார உரிமையைச் சுட்டிக்காட்டும் மறைமுகக் குறிப்பே எனலாம். மேற்குறித்த மாறவர்மன் குலசேகரன் மெய்க்கீர்த்தியில் சோழ மன்னர்களின் மாலையாகிய ஆரும் (ஆத்தியும்) குறிப்பிடப்படுவது சோழர் ஆட்சியின் வீழ்ச்சியை அடுத்து சோழ அரசின் அதிகாரத்தையும் பாண்டிய மன்னர்கள் ஏற்ற நிகழ்வை உணர்த்துகிறது. சோழர் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் பிள்ளை இருங்கோளர் என்ற பட்டத்துடன் கூடிய உயர் அதிகாரிகள் இருந்துள்ளனர். (கி.பி. 1236ஆம் ஆண்டுக்குரிய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் அச்சுதமங்கலம் சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டு, "நன்னிலம் கல்வெட்டுகள்" - இரண்டாம் தொகுதி, தொடர் எண் 267/1978, வரிகள் 19-20, தொகுப்பாசிரியை: முனைவர் ஆ. பத்மாவதி, தமிழ்நாடு தொல்லியல் துறை, 1980) செழுகை வேளாளர் குடித்தலைவர் இருங்கோள் பிள்ளை என்ற பட்டம் புனைவது, பிள்ளை இருங்கோளர் என்ற சோழர் காலப் பட்டத்துக்கும் இக்குலத்தவருக்கும் உள்ள தொடர்பை உணர்த்தக்கூடும். திருக்குறள் உரையாசிரியர்களுள் ஒருவரான பரிப்பெருமாள் (தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமாள் - கி.பி. 12ஆம் நூற்றாண்டு) இருங்கோளப் பிள்ளை வம்சத்தவராக இருக்கலாம். இத்தகைய குறிப்புகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தினால்தான் செழுகை வேளாளர் குலத்தலைவர் சூட்டிக்கொள்ளும் இருங்கோள் பிள்ளை என்ற பட்டப்பெயரின் வரலாற்றுப் பின்னணியை உணர இயலும்.
24. "வெம்பக்கோட்டைச் செப்பேடு" - எஸ்.எம். கமால், கல்வெட்டு இதழ்-29, பக்கம் 6-11, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
25. "திருமலை நாயக்கர் செப்பேடுகள்" நூலில் இடம்பெற்றுள்ள "சிறுவாலை ஜமீன் செப்பேடு" - சு. இராசகோபால், வெ. வேதாசலம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1994.
26. "திருமலை நாயக்கர் செப்பேடுகள்" நூலில் இடம்பெற்றுள்ள நான்காவது செப்பேடு - - சு. இராசகோபால், வெ. வேதாசலம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1994.
இருக்குவேளிரான மறவன் பூதி விக்கிரம கேசரி! மறவர்களின் குலமே இருக்குவேளிராகும்! தஞ்சை கள்ளர்களுக்கு இருங்கோளர் என பட்டம் உள்ளது! பிள்ளை எனப்படும் பட்டம் மறவர்களுக்கும் உண்டு! தற்போது அது வெள்ளார்களுக்குள் பொதுவாக இருப்பதை வைத்து அவர்களே பாண்டியன் எனத்தீர்மானிப்பது எப்படி?
ReplyDeleteஇருக்குவேளிரான மறவன் பூதி விக்கிரம கேசரி! மறவர்களின் குலமே இருக்குவேளிராகும்! தஞ்சை கள்ளர்களுக்கு இருங்கோளர் என பட்டம் உள்ளது! பிள்ளை எனப்படும் பட்டம் மறவர்களுக்கும் உண்டு! தற்போது அது வெள்ளார்களுக்குள் பொதுவாக இருப்பதை வைத்து அவர்களே பாண்டியன் எனத்தீர்மானிப்பது எப்படி?
ReplyDeleteBro erungovel entra pattam tharpoluthuvarai engaluku sutta padugirathu nangal kodumbalur aatchi seitha erungovel vali vanthsvargal. Engal varalarum ullathu angu
Deleteபயணுள்ளதாக உள்ளது.
ReplyDeleteகவறை சமூகம் தெலுங்கு இனம் அல்ல தமிழினம் .
ReplyDeleteசகோ வணக்கம் இதனை ஆவணங்களாக நீங்கள் பதிவேற்ற முடியுமா
ReplyDelete